Wednesday, July 31, 2019

2:50 நேரம் - போது - சமயம்

இந்த வசனத்தில் கடல் பிளந்தது  பற்றி கூறப்பட்டுள்ளது.  ஒவ்வொரு நிகழ்வுகளும் ஒரு சாராருக்கு சாதகமாக  (அருளாக)வும் இன்னொரு சாராருக்கு பாதகமாகவும் அமையும். அதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாணமாகும்.  கடல் பிளந்தது மூஸா நபிக்கு ஆதரவாக ஆனது.  பிர்அவ்ன் கூட்டத்துக்கு  எதிராக ஆனது.

மக்கள் உண்மையை விட புராணங்கள் மாதிரி சுவாரஸ்யமான கட்டுக்  கதைகளையே விரும்புகிறார்கள். அதனால் பிர்அவ்ன் சம்பந்தமாக நிறைய கட்டுக் கதைகள் உள்ளன.  அவற்றில் இரண்டை பாருங்கள்.

பிர்அவ்ன் தன்னைப் போல் ஒரு சிலையை வடித்து அதனையே மக்களை வணங்கி வருமாறு உத்திரவு பிறப்பித்தான். எப்போது தன்னை இறைவன் என்று இவன் வாதித்தானோ அப்போதே இவனது முகம் விகாரமாகிவிட்டது. நைல் நதி வற்றி விட்டது. 

இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு அவனிடம் வந்து நீதான் இறைவன் என்று சொல்கிறாயே! நதியில் தண்ணீர் ஓடச் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முறையிட்டார்கள். பிர்அவன் முதலில் திகைத்ததான். பின்பு சமாளித்துக் கொண்டு அவசியம் ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி மக்களை சமாளித்துவிட்டு ஒரு மலைக்குச் சென்றான்.

இறைவனிடம், ‘இறைவனே! நீதான் உண்மையாக வணங்கத் தகுதியுடையவன். நான் பொய்மையிலிருக்கிறேன். மறுமையில் எனக்கு எந்த நலவும் வேண்டாம். இம்மையிலேயே எனக்கு எல்லாவற்றையும் கொடுத்து விடு. வற்றிவிட்ட நைல்நதி மீது மீண்டும் தண்ணீர்ப் பெருக்கெடுத்து ஓடச் செய்’ என்று கேட்டு பிரார்த்தித்தான்.
அச்சமயத்தில் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் பிர்அவ்ன் முன் மனித உருவில் தோன்றி, தன் எஜமானின் அருட்கொடைகளை மறந்து நன்றி கெட்டத்தனமாக நடக்கும் மனிதருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?’ என்று கேட்டார்கள்.
அதற்கு பிர்அவ்ன், அவனை கடலில் மூழ்கடித்துச் சாகச் செய்ய வேண்டும்’ என்று ஆத்திரம் பொங்க கூறினான். பிர்அவ்னிடமிருந்து அதை எழுத்து மூலமாக வாங்கிக் கொண்டார்கள். 
பிர்அவ்ன் இவ்வாறு எழுதிக் கொடுத்த சமயத்தில் ‘ஓ! பிர்அவ்னே! உனக்கு நைல்நதி மீது ஆதிக்கம் செலுத்தி வரும் ஆற்றலைத் தந்தோம்’ என்று அசரீரி கேட்டது. இந்த சப்தத்தை எகிப்து வாசிகள் அனைவரும் கேட்டார்கள். 
இப்படி எழுதி விட்டு ஆதாரம் ஒரு வரலாற்றுக் குறிப்பு உள்ளது என்று முடித்து இருப்பார்கள்.
பிர்அவ்னை அல்லாஹ்  கடலில் மூழ்கடித்தான் என்றால் நம்புவது தான் முஃமின்கள்   பண்பு. . 
ஹீப்ரு மொழியில் ‘மூ’ என்றால், தண்ணீர் என்று பொருள். ‘ஷா’ என்றால் மரம் என்று பொருள். மூஷா என்ற பெயரே  மூஸா என்று ஆகிவிட்டது என்று எழுதி விட்டு. ஆதாரம்  ஒரு குறிப்பில் காணப்படுகிறது என்று முடித்து இருப்பார்கள். இப்படி நிறைய எழுதி வைத்து இருக்கிறார்கள்.
மூஸா (அலை) பிர்அவ்ன் சம்பந்தமாக குர்ஆன் ஹதீஸில் கூறப்பட்டுள்ளவை மட்டுமே உண்மை. மற்றவை அனைத்தும்  பொய்களே!

2:50ல்

إِذْ  என்ற இந்த வார்த்தை நேரம் -  போது - சமயம்  என்ற பொருளுக்காக பயன்படுத்தப்படும் வார்த்தையாகும்,  இதை எதனுடன் இணைக்கிறோமோ அந்த பொருளுடன் "போது - நேரம் - சமயம் போன்றவைகளை இணைத்துக் கொள்ள வேண்டும். 

உதாரணமாக قَالَ என்றால் கூறினான் என்றும் إِذْ قَالَ என்றால் கூறிய போது என்றும்

قُلْنَا என்றால் நாம் கூறினோம் என்றும் 

إِذْ قُلْنَا என்றால் நாம் கூறியபோது என்றும்

نَجَّيْنَا  என்றால் நாம் பாதுகாத்தோம் என்றும்  

إِذْ نَجَّيْنَا என்றால்  பாதுகாத்த போது என்றும்

فَرَقْنَا என்றால் நாம் பிரித்தோம் என்றும் 

إِذْ فَرَقْنَا என்றால் பிரித்த போது என்றும் கூறுவது போல.

இனி வார்த்தைக்கு வார்த்தை 

وَإِذْ வஇ(ர்)து 
 போது -சமயம் - நேரம்

فَرَقْنَا Fபரஃக்னா 
நாம் பிளந்தோம்

بِكُمُ பிகுமு 
உங்களுக்காக

الْبَحْرَ - அல் பஃஹ்ஃற 
கடல் - கடலை

فَأَنجَيْنَا - Fபஃஅன்ஜய்னா 
காப்பாற்றினோம்

كُمْ கும் 
உங்களை
 وَاَغْرَقْنَآ - வஃஅஃகறஃக்னா 
மூழ்கடித்தோம்

آلَ- ஃஆல 
கூட்டத்தார் - ஆட்கள்

 فِرْعَوْنَ Fபிர்ஃஅவ்ன 
Fபிர்அவ்னின் 

وَاَنْتُمْ - வஅன்தும் 
நீங்கள் 

تَنظُرُونَ - தன்ழுரூ(ன)ன்
பார்க்கிறீர்கள் - பார்த்துக் கொண்டிருக்க

وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنتُمْ تَنظُرُونَ‎ 

வஇ(ர்)து Fபரஃக்னா பிகுமுல்பஃஹ்ஃற  Fபஃஅன்ஜய்னாகும் ஃஅஃகறஃக்னா ஃஆல Fபிர்ஃஅவ்ன வஅன்தும் தன்ழுரூ(ன)ன்

மொழிப்பெயர்ப்புகள்: 
உங்களுக்காக நாம் கடலைப் பிளந்து, உங்களைக் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை அதில் மூழ்கடித்தோம்.- (அதிரை ஜமீல்)

உங்களுக்காகக் கடலைப் பிளந்து, உங்களைக் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஃபிர்அவ்னின் ஆட்களை நாம் மூழ்கடித்ததை எண்ணிப் பாருங்கள்! -(PJதொண்டி)

50. மேலும் உங்களுக்காக நாம் கடலைப்பிளந்துஉங்களை நாம் காப்பாற்றி,
 நீங்கள் பார்த்துக் கொண்டிருக் கும் போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை
அதில் மூழ்கடித்தோம்(என்பதையும் நினைவு கூறுங்கள்.-(ஜான் டிரஸ்ட், K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதிகடையநல்லுார்)

மேலும் உங்களுக்காகக் கடலைப் பிளந்து நாம் உங்களை காப்பாற்றி (உங்களைப் பின்தொடர்ந்து வந்த) ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே மூழ்கடித்தோம். -(ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்) 


மேலும்நாம் உங்களுக்காகக் கடலைப் பிளந்(து வழி ஏற்படுத்தித்தந்)துபின்னர் உங்களைக் காப்பாற்றிநீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை நாம் மூழ்கடித்ததையும் எண்ணிப் பாருங்கள்! - (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)


மேலும், நாம் உங்களுக்காகக் கடலைப் பிளந்து, பின்னர் நாம் உங்களைக் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் நிலையிலேயே ஃபிர் அவ்னுடைய கூட்டத்தாரை மூழ்கடித்தோம் என்பதையும் (நினைவு கூறுங்கள்) - (அல்-மதீனா அல்-முனவ்வரா)

Tuesday, July 30, 2019

2:49. எப்படிக் கொலை செய்தார்கள்? அறுத்தா? குத்தியா? நெறித்தா?

“வ நிஸாஅனா வ நிஸாஅனாஃஅகும்” இது பெண் பிள்ளைகளைக் குறிக்கிறதா? மனைவிகளை குறிக்கிறதா?

அரபிகள் இரீது (ர)தபீஃஹ - (அறுத்தது வேண்டும்) என்பார்கள். அரபியுடன் உள்ளவர்கள் இதைக் கேட்டு இருப்பார்கள். இந்த வசனத்தில் யு(ர)தப்பிஃஹுன என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இது (ர)தபஃஹ் - அறுத்தல் என்ற வார்த்தையில் இருந்து வந்ததுதான் அறுத்தார்கள் என்பது இதன் நேரடி பொருள்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/07/249.html

2:67.  تَذْبَحُوْ -த(ர்)துபஃஹு- நீங்கள் அறுக்க வேண்டும் 
2:71.  فَذَبَحُوْهَا - Fப(ர)தபஃஹுஹாஅவர்கள் அறுத்தனர்.

5:3.  وَمَا ذُ بِحَ - வமா(ரு)துபிஃஹ - அறுக்கப்பட்டது 
27:21. اَذْبَحَنَّهٗۤ -அ(ர்)துபஃஹன்னஹுஅதை அறுத்து விடுவேன்
37:102.   اَذْبَحُكَ -அ(ர்)துபஃஹுக - (நேரடி பொருள்) உன்னை நான் அறுப்பேன்  ( அடுத்துள்ள வார்த்தைகளை வைத்து அந்த வசனத்தில்  அறுப்பது போல் என பொருள் வரும்) 
  
ஆகிய இந்த  வசனங்கள்  மூலமும் “யு(ர)தப்பிஃஹுன”  வுக்கு அறுத்தார்கள் என்பது  நேரடி பொருள் என்பதை அறியலாம்

இந்த 2:49 வசனத்திலும் இது போன்றுள்ள   14:6.   28:4   வசனங்களிலும்  அறுத்தார்கள் என்றும் கொலை செய்தார்கள் என்றும்  இருவிதமாக முதர்ஜிம் (மொழி பெயர்ப்பாளர்)கள்  மொழி பெயர்த்துள்ளார்கள். 

கொலை செய்தார்கள் என்பதில் அறுத்தார்கள் என்பதும் அடங்கி இருக்கிறது. 

அறுத்தார்கள் என்பதில் கொலை செய்தார்கள் என்பதும் அடங்கி இருக்கிறது. இப்படி விளக்கம் சொல்பவர்களும் உண்டு.

இதே நிகழ்வை சொல்லக் கூடிய  7:141.ல்  يُقَتِّلُوْنَ - யுஃகத்திலுான - கொன்று - (கொலை செய்து) என்றே உள்ளது. ஆகவே இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று விளக்கமாக உள்ளது. 

கொலை செய்வதில் குத்திக் கொலை செய்வது நெறித்துக் கொலை செய்வது என பல வகை இருக்கிறது. அந்த மாபாவிகள் ஆண் குழந்தைகளை அறுத்துக் கொலை செய்தார்கள் என்பதை 14:6.   28:4,   7:141. ஆகிய வசனங்களை இணைத்துப் பார்க்கும் போது அறியலாம். 

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள இன்னுமிரு வார்த்தைகள் “அப்னாஃஅ”   “நிஸாஃஅ“ 

அப்னாஃஅ” என்பதற்கு  நேரடி பொருள் ஆண் மக்கள். “பனாத்” என்றால் பெண் மக்கள். 

இன்றுள்ள அரபிகளின் நடைமுறையிலும் ஆண் மக்கள். பெண் மக்கள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கி அப்னாஃஅ” என்று சொல்கின்ற பழக்கம் இருக்கிறது

3:61 ல் அப்னாஃஅனா” - எங்கள் பிள்ளைகளையும்  “வஅப்னாஃஅனாஅகும் - உங்கள் பிள்ளைகளையும் என்று அப்துல் ஹமீது பாகவி, E.M. அப்துர் ரஹ்மான், நூரிய்யி, பாஜில் பாகவி, பீ.ஜே, தாருல் ஹுதா, றஹ்மத், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)  தாருஸ்ஸலாம்   ரியாத்   போன்றவர்கள்  மொழி பெயர்த்து இருக்கிறார்கள். 

அதாவது ஆண் மக்கள். பெண் மக்கள் ஆகிய இரு பாலரையும் உள்ளடக்கி பிள்ளைகளையும் - மக்களையும் என மொழி பெயர்த்து  இருக்கிறார்கள். 


“வ நிஸாஃஅனா வ நிஸாஃஅனாஃஅகும்” - இதற்கு  எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் என்று எல்லாருமே இந்த பொதுவான வார்த்தையை  மொழி பெயர்ப்பாக ஆக்கி இருப்பார்கள். 

இந்த இடத்தில் இடம் பெற்றுள்ள நிஸாஃஅ -  பெண்கள் என்பது மனைவிகளையே குறிக்கிறது.   எங்கள்   மனைவிகளையும்  உங்கள் மனைவிகளையும்  என்றே அர்த்தம் தருகிறது. 

இதற்கு,   2:187.   2:223.   2:226.   4:23.   4:129.   33:30.   33:32.   58:2.   58:3.    ஆகிய வசனங்களில் மனைவிகளை குறிக்க  இடம் பெற்றுள்ள  நிஸாஃஅ  ஆதாரங்களாக  உள்ளன.

ஒரு வார்த்தைக்கு நேரடி பொருள் ஒன்று இருந்தாலும் அதன் முன் பின் வார்த்தைகள், வசனங்களை வைத்தே  சரியான பொருள் காண முடியும். இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள ஆகிய வார்த்தைகள் நமக்கு படிப்பினை தருகின்றன.
இனி 2:49 வார்த்தைக்கு வார்த்தை

 وَاِذْ வஇ(ர்)து  (இது தனித்து பொருள் தாராத இடைச் சொல்)
போது - சமயம் -நேரம்- சந்தர்ப்பம் 


 نَجَّيْنَاநஜ்ஜைனா

நாம் காப்பாற்றினோம் -  விடுவித்தோம் - விடுதலை அளித்தோம் 

كُم - கும்  
உங்களை

مِنْ -  மின் 
இருந்து - From -லிருந்து

آلِ - ஆலி
கூட்டம் - குடும்பம்- ஆட்கள்

فِرْعَوْنَ ஃபிர்அவ்ன 

 ஃபிர்அவ்னின் - ஃபிர்அவ்னுடைய

يَسُومُونَ - யஸுமூன
வேதனை (நோவினை - சிரம) ப்படுத்துவார்கள் - 

كُمْ கும் 

உங்களை

سُوءَ ஸுஃஅ 
கடுமை - தீய - கொடிய

الْعَذَاب - அல் ஃஅராபி 
வேதனை - சித்திரவதை

يُذَبِّحُونَ யு(ர)தப்பிஃஹுன 
அறுப்பார்கள் - அறுத்தார்கள் (என்பது நேரடி பொருள் என்றாலும் வசன நடையில் அடுத்து வரும் வார்த்தையின் அடிப்படையில் கொலை செய்தார்கள் என்று மொழி பெயர்த்துள்ளார்கள்

أَبْنَاءَ - அப்னாஃஅ

ஆண் மக்கள் - (ஆண்) குழந்தைகள்

كُمْ கும் 
உங்கள்

 وَيَسْتَحْيُوْنَ - வயஸ்தஃஹ்யூன 
உயிருடன் விட்டனர் - வாழவிடுவார்கள் - வாழவிட்டார்கள்

نِسَاءَ நிஸாஃஅ
பெண்கள்

كُمْ கும் 
உங்கள்

وَفِي ذَٰلِكُم Fபீ தா(ரா)லிகும்
அதில் 


بَلَاءٌ பலாஃவுன்
சோதனை

مِّن மின் 
இருந்து - From -லிருந்து

رَّبِّكُمْ - ரப்பிகும் 
உங்கள் இறைவன்- 

عَظِيمٌ - ஃஅழீம்
மிகப் பெரும் - மாபெரும்

وَإِذْ نَجَّيْنَاكُم مِّنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَٰلِكُم بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ


வஇ(ர்)து நஜ்ஜைனாகும் மின் ஆலிஃபிர்அவ்ன யஸுமூனகும்  ஸுஃஅல் ஃஅராபி  யு(ர)தப்பிஃஹுன அப்னாஃஅகும்  யஸ்தஃஹ்யூன நிஸாஃஅகும் Fபீ     தா(ரா)லிகும் பலாஃவு(ன்)ம் மின்  ரப்பிகும் அழீம்

மொழிப்பெயர்ப்புகள் :

உங்களைக் கடுமையாக வேதனைப்படுத்தி வந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களை விடுவித்த நிகழ்வை நினைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களின் ஆண் மக்களைக் கொன்று, பெண் மக்களை வாழ விட்டிருந்தார்கள். அதில் உங்களுக்கு உங்கள் இறைவனது பெரும் சோதனை ஒன்றிருந்தது - (அதிரை ஜமீல்)

ஃபிர்அவ்னின் ஆட்களிடமிருந்து உங்களை நாம் காப்பாற்றியதை எண்ணிப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குக் கடுமையான வேதனையை அனுபவிக்கச் செய்தார்கள். உங்கள் ஆண் மக்களைக் கொலை செய்து விட்டு, பெண்(மக்)களை உயிருடன் விட்டனர். உங்கள் இறைவனிடமிருந்து இது மிகப் பெரும் சோதனையாக இருந்தது.- (PJதொண்டி)

உங்களை கடுமையாக வேதனைப்படுத்தி வந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து உங்களை நாம் விடு வித்ததையும் (நினைவு கூறுங்கள்)அவர்கள் உங்கள் ஆண் மக்களை கொன்றுஉங்கள் பெண்மக்களை வாழ விட்டிருந்தார்கள், அதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை இருந்தது. 
-(ஜான் டிரஸ்ட் -K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதிகடையநல்லுார்)

அன்றி உங்களுக்குத் தீய நோவினை செய்து கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிலிருந்து நாம் உங்களை விடுவித்தோம். அவர்கள் உங்கள் ஆண் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு உங்கள் பெண் (பிள்ளை)களை (மட்டும்) உயிருடன் வாழவிட்டு வந்தார்கள். அதில் உங்கள் இறைவனுடைய ஒரு பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது. - ( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்) 


ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரி(ன் அடிமைத் தளையி)லிருந்து நாம் உங்களுக்கு விடுதலை அளித்த சந்தர்ப்பத்தையும் நினைவு கூருங்கள்! அவர்கள் கொடிய வேதனையில் உங்களை ஆழ்த்தி வைத்திருந்தார்கள். உங்களுடைய ஆண் மக்களைக் கொன்றொழித்துக் கொண்டும், உங்களுடைய பெண் மக்களை உயிருடன் விட்டு வைத்துக் கொண்டும் இருந்தார்கள். இதன் மூலம் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மாபெரும் சோதனை ஏற்பட்டிருந்தது. -(இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)



இன்னும், ஃபிர் அவ்னுடைய கூட்டத்தாரிலிருந்து நான் உங்களை காப்பற்றிய சமயத்தை_ (நினைவு கூறுங்கள்); அவர்கள், தீய வேதனையை உங்களுக்குச் சுவைக்கச் செய்து கொண்டிருந்தார்கள்; அதாவது அவர்கள் உங்கள் ஆண்மக்களை அறுத்துக் கொன்று விட்டு உங்கள் பெண்(மக்)களை உயிருடன் வாழ விட்டு வந்தார்கள; அதில் உங்களுக்கு உங்கள் இரட்சகனுடைய மகத்தான சோதனையும் இருந்தது.(அல்-மதீனா அல்-முனவ்வரா)